வியாழன், 13 நவம்பர், 2014

தேசிய பொருளாதாரத்தை வீழ்த்த சதி சவால்களை தனியாக எதிர்கொள்வேன் ஜனாதிபதி மஹிந்த..!!(படங்கள் இணைப்பு)

வெற்றி கொண்ட சுதந்திரத்தை சவாலுக்கு உட்படுத்தவோ அல்லது பாரிய பொருளாதார அபிவிருத்திக்கு தடையேற்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதை தற்போது சிலரால் சகித்து கொள்ள முடியவில்லை.

தேசிய பொருளாதார வீழ்த்தவே அவர்கள் முயற்சித்து வருகின்றனர். நாட்டை பின்னோக்கி இட்டுச் செல்ல இடமளிக்க முடியாது.

நாட்டை பின்னோக்கி இட்டுச் செல்வது பாரிய அநியாயம். பிறருக்கு ஏற்ற வகையில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து வேடிக்கை பார்க்க தயாரில்லை.
தனிப்பட்ட ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் சுமையை மக்கள் சுமத்தவில்லை. ஆட்சியாளர் என்ற வகையில் பிரச்சினைகளை நான் எதிர்கொள்வேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக