புதன், 12 நவம்பர், 2014

மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய ரயில்..!!

மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கையும் தெற்கையும் இணைத்து ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ள ரயில் சேவையின் கீழ் இந்த புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதி சனிக்கிழமை தோறும் காலை 6.20க்கு மாத்தறையில் புறப்படும் இந்த கடுகதி ரயில் அன்றைய தினம் மாலை 5.10க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.

மீண்டும் ஞாயிறு முற்பகல் 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 8.50க்கு மாத்தறையை சென்றடையும்.

மாத்தறை, காலி உட்பட தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த ரயில் சேவை மிக வசதியாக இருப்பதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக