செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஜெயலலிதா அவசர ஜாமீன் மனு மீது நாளை விசாரணை..!!!

ஜெயலலிதாவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது கர்நாடக நீதிமன்றம்.

இதையடுத்து ஜெயலலிதா வழக்கறிஞர் குமார், நாளையே விசாரிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் அவசர மனு தாக்கல் செய்தார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாயிடம் வழக்குரைஞர் குமார் மனுவை அளித்தார்.

இதற்கிடையில், கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஜான் மைக்கேல் டி.குன்ஹா 15 நிமிடங்கள் ஆலோசனை செய்தார்.


பின்னர், ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கர்நாடகா ஐகோர்ட்டில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, ஐகோர்ட் பதிவாளர் ஏற்றுக் கொண்டதை அடுத்து, ஜெயலலிதாவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக