செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு இருவர் காயம்...!!!

தெஹிவளையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
தெஹிவளை பெரேரா மாவத்தையில் இந்தச் சம்பவம் இன்று நண்பகல் அளவில் நடைபெற்றுள்ளது.

காரில் வந்த ஒரு மர்ம நபர் இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் ஒருவர் மன்ன மஞ்சு என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான நபர்கள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்களா என்பது குறித்தும் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக