
ஸ்டாலின் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ''இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதும், கொடூரமான முறையில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோவா கடற்படை தளத்தில் உள்ள இரண்டு போர் கப்பல்களை மத்திய அரசு, இலங்கைக்கு வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
எனவே இந்த கப்பல்களை இலங்கைக்கு விற்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதில் மத்திய அமைச்சரவை செயலர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக