செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

அபிவிருத்தி என்ற பெயரில் அழிவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்கிறார் ஜனாதிபதி....!!

அபிவிருத்தி என்ற பெயரில் அழிவுகளை ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியதாக அவரது ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் மாவட்டத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை முன்னேற்றங்களை காண முடிவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக