செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தாக்குதலுக்கு உள்ளான யாழ் மாணவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்....!!!

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் நேற்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கு பலாங்கொட வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு அவர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பீ.உடவத்த தெரிவித்துள்ளார்.
சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் தமிழ் மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானார்.

இது தொடர்பாக பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதுடன் விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதலே சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளதாகவும் இந்த சம்பவம் இனவாத அடிப்படையிலானது அல்ல எனவும் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் விடுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வெளியில் இருந்து வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதை எந்த விதத்திலும் நம்ப முடியாது.


பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர். சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தில் 10 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த 18 வருடங்களாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக கல்வி கற்று வருவதுடன் அவர்கள் மத்தியில் எவ்விதமான இனவாத மோதல்களும் இல்லை எனவும் உபவேந்தர் உடவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தமிழ் மாணவர் மீதான தாக்குதுலுக்கு மாணவர்கள் இடையிலான மோதல் காரணமல்ல எனவும் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவின் பிரதிநிதி ரசிது ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிலரது அரசியல் நோக்கங்களுக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக