
கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய அறிக்கையிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன சிறைச்சாலையில் இருந்து தனது தாய் உட்பட பல்வேறு நபர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்திருந்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2013 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபரை மேலும் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். எனினும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனடிப்படையில் சந்தேக நபரான ரவிந்து குணவர்தனவிற்கு பிணை வழங்குவதா இல்லை என்பது பற்றி எதிர்வரும் 6 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக