வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தொடர்ந்தும் இலங்கையின் உதவியை கோரும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்..!!!

போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தொடர்ந்தும் இலங்கையிடம் உதவியை கோரி வருகிறது.
ஆணைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலான விசாரணைகளில் இலங்கை அரசை ஈடுபட வைப்பதற்கான முயற்சிகள் தொடரும் என மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா விசாரணைக்குழுவினர் இலங்கைக்கு வந்து அரசாங்க அதிகாரிகளையும் ஏனையவர்களை சந்திக்கவும் தொடர்புடைய ஆவணங்களை பெறவும் அனுமதி வழங்குமாறு மனித உரிமை ஆணையாளர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறார் எனவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக்குழுவினர் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக