சனி, 23 ஆகஸ்ட், 2014

சுஜாதா, டோவல், மன்மோகனையும் சந்தித்து பேச்சு நடத்தியது கூட்டமைப்பு!!


பிரதமர் நரேந்திரமோடி தலைமையலான இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி அரசின் அழைப்புக்கிணங்க புதுடில்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று இந்திய வெளி விவகாரச் செயலாளர் சுஜாதா சிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி
மன்மோகன் சிங் ஆகியோரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

நேற்றுக் காலை 9.30 மணிக்கு இந்திய வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த கூட்டமைப்புக் குழுவினர், காலை 10.30 மணிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். இதன் பின்னர் மாலை 3.30 மணிக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலையும், மாலை 6.30 மணிக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையும் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்புகளின்போது இரா ணுவ ஆக்கிரமிப்புகளால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக