சனி, 23 ஆகஸ்ட், 2014

மட். களுவாஞ்சிக்குடியில் 3 பிள்ளைகளின் தாயார் சுருக்கிட்டுத் தற்கொலை!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தில் கண்ணகி வித்தியாலயத்திற்கு அருகில் வசித்து வரும் இளையதம்பி யாழினி வயது (31)  என்பவர் இன்று சனிக்கிழமை தனது வீட்டில் துக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் திருமணம் முடித்து 3 பெண் பிள்ளைகளுக்கு தாயானவர்.

இவருடைய முதலாவது பிள்ளையின் வயது 9, இரண்டாவது பிள்ளையின்
வயது 4 கடைசிப்பிள்ளை 10 மாதக் கைக்குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய கணவர் கட்டாரில் தொழில் புரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தனது கணவனுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் தனது 10 மாதக் குழந்தை எழுந்து அழுதபோது தாய் எழும்பாததன் காரணமாக மற்றைய இரண்டு குழந்தைகளும் எழுந்து பார்த்த போது அம்மா தூக்கில் தொங்குவதனைக் கண்டு வெளியில் தூங்கிக் கொண்டிருந்த தமது அம்மப்பாவிடம் கூறியிருக்கின்றார்கள்.

அவர் அறையை வந்து பார்த்ததும் தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதனைக் கண்டிருக்கின்றார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக