திங்கள், 14 ஜூலை, 2014

வட மாகாண அபிவிருத்தி குறித்த ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன!!


வட மாகாண அபிவிருத்தி தொடர்பிலான ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஆலோசகரின் வீட்டில் காணப்பட்ட ஆவணங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி இணைப்பு ஆலோசகர் ஜயம்பதி திஸாநாயக்கவின் மாத்தளையில் அமைந்துள்ள வீட்டில் இந்த ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன.வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்த ஆவணங்களே களவாடப்பட்டுள்ளன.ஜனாதிபதியின் ஆலோசகர், வீட்டில் இல்லாத நேரத்தில்
ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபபட்டுள்ளது.

வீட்டில் காணப்பட்ட தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட ஏனைய பெறுமதிவாய்ந்த பொருட்கள் எதுவும் காளவாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு அபிவிருத்தி குறித்த ஆவணங்கள் மட்டுமே களவாடப்பட்டுள்ளன.
வடக்கின் அபிவிருத்திப் பணிகள் ஜயம்பதி திஸாநாயக்கவின் வழிகாட்டல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கடந்த 12ம் திகதி இந்த ஆவணங்கள் களவாடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக