செவ்வாய், 15 ஜூலை, 2014

மக்களை நேசித்து மரணத்தை தழுவிக்கொண்ட தோழர் வசந்தன் அவர்களுக்கு மலர் அஞ்சலி....!!!!(படங்கள் இணைப்பு)

25வது வீர மக்கள் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னால் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் தமிழிழ  மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த உறுப்பினருமான  தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) அவர்களுக்கு றம்பைக்குளம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில்அவரது மறைந்த தினமான இன்று (15.07) அவர்களை நினைவு கூரும் முகமாக விளக்கேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவருடன் மறைந்த அவரது புதல்வர்  ச.வக்சலன் அவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வில்  வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) முக்கியஸ்தர் திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் மற்றும் தமிழிழ  மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர்களான  திரு.யோகராஜன், திரு.ராஜா, திரு.சூரி, திரு.சிவா, திரு.சே.சுரேஷ், திரு.சுரேஷ்குமார்,

கவிஞர் மாணிக்கம்ஜெகன், செட்டிகுளம்   பிரதேச சபை உறுப்பினர் திரு.சிவம் அவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் உப நகர பிதா திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்கள் எமது அமைப்பின் தோழர் வசந்தன் அவர்கள் எமது மக்களுக்கும் இந்த மாவட்டத்துக்கும் சொல்லில் அடங்க முடியாத அளப்பெரும் சேவை ஆற்றியவர் இவரது இறந்த தினமான 1998.07.15 அன்று இவரது மரண நிகழ்வில்  மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட போது இவர் எந்த  அளவுக்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் என்பதை கண்ணுடாக கண்டுகொண்டோம். மக்களை நேசித்து மரணத்தை தழுவிக்கொண்ட தோழர் வசந்தன் அவர்கள் என்றும் எம் மனதில் நீங்காது இடம் கொண்டவர் என தெரிவித்தர்.































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக