வலி.வடக்கு, கீரிமலைப்பகுதியில் கடற்படையினர் பொதுமக்களின் காணிகளை அபகரிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் எதிர்வரும் 18 ஆம் திகதி வழக்கு தொடரப்போகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இன்று திங்கட்கிழமை அறிவித்தார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று
இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு யாழ்.நகரில், யாழ்பாடி விடுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- கீரிமலை பகுதியில் பொதுமக்களின் காணிகளைக் கடற்படையினரது தேவைகளுக்காகக் கையகப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே இதனைத் தடுக்கும் வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளோம் என்றார். அத்துடன் நாளை நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டம் எந்த தடை வந்தாலும் நிறுத்தப்படமாட்டாது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவை வழங்கியுள்ளது.-என்றார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செ.கஜேந்திரன்,மாக்ஸிஸ் லெனினிய கட்சி பிரதிநிதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு யாழ்.நகரில், யாழ்பாடி விடுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- கீரிமலை பகுதியில் பொதுமக்களின் காணிகளைக் கடற்படையினரது தேவைகளுக்காகக் கையகப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே இதனைத் தடுக்கும் வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளோம் என்றார். அத்துடன் நாளை நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டம் எந்த தடை வந்தாலும் நிறுத்தப்படமாட்டாது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவை வழங்கியுள்ளது.-என்றார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செ.கஜேந்திரன்,மாக்ஸிஸ் லெனினிய கட்சி பிரதிநிதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக