செவ்வாய், 15 ஜூலை, 2014

வவுனியா பிறமண்டு வித்தியாலயத்திற்கு அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க காசோலை அன்பளிப்பு....!!!! ( படங்கள் இணைப்பு)

வவுனியா பிறமண்டு வித்தியாலயத்தில் இன்று(15.07) காவலாளியான தங்கராசா  ததீஸ்குமார் அவர்களுக்கு முதல் தடவையாக அவரது மாதாந்த வேதனம் லண்டனில் வசிக்கும் தோழர்  தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களால் வித்தியாலய முதல்வர் திருமதி. மஞ்சுளா திருவருள்நேசன் அவர்களிடம் காசோலை கையளிக்கப்பட்டது.

தமிழீழ மக்கள்  விடுதலை கழகத்தின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான தற்போதைய வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் வித்தியாலய அதிபர் அவர்களினால் எமது வித்தியாலயத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அதற்கு  ஒரு காவலாளி தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


இதற்கு அமைவாக நிரந்தரமாக ஒரு காவலாளியை கடமைக்கு அமர்த்தும் காலம் வரை தற்காலிகமாக ஒரு காவலாளி கடமைக்கு அமர்த்தப்படுள்ளது. கௌரவ திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஏற்பாட்டில் லண்டனில் வசிக்கும் சமூக சேவையாளரான தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் காவலாளிக்கான இவ் வேதனம் கையளிக்கப்பட்டமை குறிபிடத்தக்கது.இவருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வரை  இவ் வேதனம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இன் நிகழ்வில் மற்றும் பிரதி அதிபர் திருமதி ரஜனி ராஜேந்திரன்,ஆசிரியர்களான திருமதி. ஜெ.றோய் ஜெயக்குமார், திருமதி.சியாமா உதயகுமார்,கோவில்குளம் இளைஞர் கழகத்தை சேர்ந்த திரு.நிகேதன், திரு.சுரேஷ்குமார், திரு. சுரேஷ், திரு.பிரதீபன். ஆகியோரும் கலந்துகொண்டனர் .  







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக