வியாழன், 19 ஜூன், 2014

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!!

அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழழை லண்டனில் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆண்களும், பெண்களுமாக ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் பிரிட்டனின் பல பாகங்களில் இருந்தும் வந்து அதில் கலந்து கொண்டனர். பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்த அவர்கள்
கோஷங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக