வியாழன், 12 ஜூன், 2014

பாக் இராணுவத் தலைமைத் தளபதி 19 ஆம் திகதி இலங்கை வருகிறார்!!


பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் நான்கு நாள் பயணமாக, எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளார். அன்று பிற்பகல், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். மேலும், இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் போது பாகிஸ்தான் இராணுவத் தளபதி
யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ அதிகாரி தலைமையிலான குழுவின் வரிசையில் இது மூன்றாவது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக