இலங்கை இனப்பிரச்சினைக்கு சமரசம் செய்வதற்காக இலங்கை விடயத்தில் தென்னாபிரிக்கா தலையிடுவதை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்காக தென்னாபிரிக்கா ஜனாதிபதியினால் இதற்கென விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் அந்த நாட்டின் உபஜனாதிபதி சிறில்
ரம்போஸாவின் முயற்சி தொடர்வது சந்தேகத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் கடந்த திங்களன்று கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் ஜாதிக ஹேல உறுமய மற்றும் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தென்னாபிரிக்கத் தலையீட்டை கடுமையாக எதிர்த்தன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக