சனி, 3 மே, 2014

பெயர்ப் பலகைகளில் காணப்படும் பிழைகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது!!

பெயர்ப் பலகைகளில் காண்படும் தமிழ்ப் பிழைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் பெயர்ப் பலகைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் பிழைகளும், எழுத்து பிழைகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காணப்படும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிப் பிழைகள் காணப்படுவதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் இவ்வாறான தவறுகள் நடைபெற இடமளிக்க முடியாது எனவும், இவ்வாறான பிழைகள் திருத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக