சனி, 3 மே, 2014

ஐ.தே.க.எம்.பி.க்கள் குழு இன்று அம்பாந்தோட்டைக்கு விஜயம்!!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழு­வினர் இன்று மத்­தள விமா­ன­நி­லையம், அம்­பாந்­தோட்டை துறை­முகம்
ஆகி­ய­வற்றை பார்­வை­யி­டுவதற்­காக விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தோடு அங்கு ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

இது தொடர்­பாக ஐக்­கிய தேசியக் கட்சின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீன் பெர்­னாண்டோ கருத்து வெள வெளியி­டு­கையில் இன்­றை­ய­தினம் எமது கட்­சியைச் சார்ந்த அனைத்துப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மத்­தள விமான நிலையம், அம­பாந்­தோட்டை துறை­முகம் ஆகி­ய­வற்றைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக காலை 6.00மணி­ய­ளிவில் ஸ்ரீ கொத்­த­வி­லி­ருந்து புறப்­ப­ட­வுள்ளோம்.
அங்கு செல்லும் நாம் கடந்த முறை எமது கட்­சியைச் சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தாக்­கப்­பட்­ட­மையைக் கண்­டித்தும், விமா­ன­நி­லையம் மற்றும் துறை­மு­கத்தில் காணப்­படும் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் ஆhப்­பாட்­ட­மொன்­றிலும் ஈடு­ப­ட­வுள்ளோம் என்றார்.
முன்­ன­தாக கடந்த மாதம் 17ஆம் திகதி ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஐவர் அடங்­கிய பாரா­ளு­மன்றக் குழு­வினர் அர­சாங்­கத்தின் அனு­மதி பெற்று மத்­த­ள­வி­மான நிலையம், அம்­பாந்­தோட்டை துறைமுக என்பனவற்றை பார்வையிடச் சென்றிந்த போது ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக