ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று மத்தள விமானநிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம்
ஆகியவற்றை பார்வையிடுவதற்காக விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதோடு அங்கு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெள வெளியிடுகையில் இன்றையதினம் எமது கட்சியைச் சார்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்தள விமான நிலையம், அமபாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக காலை 6.00மணியளிவில் ஸ்ரீ கொத்தவிலிருந்து புறப்படவுள்ளோம்.
அங்கு செல்லும் நாம் கடந்த முறை எமது கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், விமானநிலையம் மற்றும் துறைமுகத்தில் காணப்படும் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆhப்பாட்டமொன்றிலும் ஈடுபடவுள்ளோம் என்றார்.
முன்னதாக கடந்த மாதம் 17ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஐவர் அடங்கிய பாராளுமன்றக் குழுவினர் அரசாங்கத்தின் அனுமதி பெற்று மத்தளவிமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுக என்பனவற்றை பார்வையிடச் சென்றிந்த போது ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக