புதன், 21 மே, 2014

தம்புள்ளயில் 25 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்....!!!!!

தம்புள்ள பிரதேச போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த 25 பொலிஸாருக்கு 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் விதத்தில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜீ.ஜே சந்ரகுமாரவின் பணிப்புரைக்கமைவாக தம்புள்ள போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 13 பேர் , சீகிரிய, கலேவெல மற்றும் மாத்தளை பொலிஸ் நிலையங்களுக்கும் கலேவெல பொலிஸ் நிலையம் மற்றும் சீகிரிய பொலிஸ் நிலையம் என்பவற்றிலிருந்து தலா 6 பேர் தம்புள்ள பொலிஸ்
நிலையத்திற்குமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வெஸாக் பெளர்ணமி தினத்திலும் , மறுதினத்திலுமாக இரண்டு தினங்கள் தொடர்ச்சியாக தம்புள்ள பிரதேசத்தில் வெவ்வேறு இரு வீதி விபத்துக்களினால் இருவர் உயிரிழந்த சம்பவங்களை யடுத்தே, போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்கள் இடமாற் றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்டு கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக