
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நாளை மறுதினம் 12ம்திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2மணிக்கு அதிபர் அ.அகிலதாஸ் தலைமையில் பஞ்சலிங்கம் மண்டபத்தில் நடைபெறும். பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவர் சமூகப் புரவலர் மாணிக்கம் சுப்பிரமணியம் கலந்து கொள்வார். பரிசில்களை மலதி சுப்பிரமணியம் வழங்கி வைப்பார். ஆசியுரையை கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய கோயில் பிரதமகுரு சிவசிறீ எஸ். சிவதாசக் குருக்களும், வாழ்த்துரையை நல்லூர் கல்விக் கோட்டப்பணிப்பாளர் எஸ். மாணிக்கராஜா, கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் எஸ்.சகாதே வன் ஆகியோரும் வழங்கவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக