செவ்வாய், 19 அக்டோபர், 2010

ஐ.தே.கட்சி எம்.பி ரஞ்சன் ராமநாயக்க பிணையில் செல்ல அனுமதி..!

திருமணம் முடிப்பதாகக்கூறி ஆசிரியை ஒருவரிடம் 10லட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. 25 ஆயிரம் ரொக்கப்பிணை மற்றும் தலா 05லட்சம் ரூபாவுக்கான இரு சரீர பிணைகளுடன் செல்ல கண்டி மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார். இம்மனு மீதான விசாரணை கண்டி மாஜிஸ்ரேட் மன்றில் மேலதிக நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேலதிக நீதவான் இவர் பிணையில்செல்ல அனுமதி வழங்கினார். அதேநேரம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளுவதாயின் முன்கூட்டியே நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஏதாவது ஒரு வழியில் முறைப்பாட்டுக்காரரை அச்சுறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் பிணை ரத்துச்செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் முடிப்பதாக கூறி ஆசிரியை ஒருவரிடம் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்கா எம்.பியை கண்டி விசேட குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினர் கடந்த 14ம்திகதி கைதுசெய்தது தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக