செவ்வாய், 19 அக்டோபர், 2010

இம்மாதம் 29ம்திகதி முதல் நவம்பர் 11ம் திகதிவரை டில்லியில் சில்ப சியலங்கா கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை..!

புதுடில்லி நகரத்தில் இம்மாதம் 29ம்திகதி முதல் நவம்பர் 11ம் திகதிவரை சில்ப சியலங்கா கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை நடைபெறவுள்ளன. இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், இந்திய கைப்பணிப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் மற்றும் இலங்கை உல்லாசத்துறை மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. புதுடில்லி (டில்லி ஹாட்) கைப்பணிப் பொருட்கள் விற்பனை மத்திய நிலையத்தில் நடைபெறுகின்ற இக்கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையில் இலங்கையின் பல்வேறு துறைசார்ந்த கைப்பணிப் பொருள் உற்பத்தி கலைஞர்கள் 11பேர் கலந்து கொள்கின்றனர். கலைஞர்களை வழியனுப்பி வைக்கும் முகமாக நேற்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பு அமைச்சு அலுவலகத்தில் விசேட வைபவம் ஒன்று நடைபெற்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்: பாரம்பரிய கலாசார விழுமியங்களை பிரதி பலிக்கும் கைப்பணிப் பொருட்களின் ஊடாக இரு நாடுகளினதும் உறவுப் பாலத்தை நாம் வளமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இச்சந்தர்ப்பத்தை மிகவும் சரியாகப் பயன்படுத்தி கலைஞர்கள் மேம்பாடு அடையவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக