சனி, 16 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி மடவளையில் கையெழுத்து வேட்டை..!

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நேற்றையதினம் முற்பகல் 11மணியளவில் கண்டி, மடவளை நகரில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. கண்டி மாவட்ட முன்னாள் ஜே.வி.பி யின் நாடாளுமன்ற அங்கத்தவர் நவரத்ன உற்பட பிரதேசசபை மற்றும் ஐ.தே.க அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவர் நவரத்தன பண்டா உரையாற்றியபோது, எமது நாட்டின் இறைமைக்கு எதிராக இயங்கிய பலர் இன்று உயர் பதவிகளில் இருக்கும்போது நாட்டைப் பாதுகாத்த மாவீரர் இன்று சிறையில் அடைக்கபட்டுள்ளார். அவரை மீட்டெடுப்பது சகலரதும் பொறுப்பாகும். எனவே சாதி மத பேதமின்றி சகலரும் எமது இவ் அகிம்சை போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக