ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள்மீது வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்த காரணம் ஐக்கிய தேசியக் கட்சி அரசே-கே.குருநாதன்..!

தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள்மீது வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்த காரணம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே என மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த மட்டக்களப்பு அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே. குருநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கற்றிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றது. இதில் ஆணைக்குழு உறுப்பினர்களான எம்.பி. பரணகம, ஹந்தவத்தை, ரொகான் பெரேரா, பளியக்கார, மனோகரி இராமநாதன், சி. சண்முகம் ஆகியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இவ் அமர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இங்கு மட்டக்களப்பு சமாதான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மில்லர் முதலில் தனது சாட்சியத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார். இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுவின் தலைவர் குருநாதன் காணி விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நடந்துகொண்ட விதம் தமிழ் மக்களைப் பாதித்தது. தமிழர்களைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு காணிகளை அபகரித்தது. சமாதானம் சீர்குலைந்ததற்கு அடிப்படைக் காரணம் காணி விடயமேயாகும். தமிழ் மக்களுக்கு சமாதானத்தின்மீது நம்பிக்கையீனம் ஏற்படவும் யுத்தம் ஏற்படவும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்த மோசடி செயலும் திட்டமிட்ட நில அபகரிப்புமே காரணம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஜனாதிபதி இவ் ஆணைக்குழுவை நியமித்தமைக்கு நான் நன்றி கூறுகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக