ஞாயிறு, 10 அக்டோபர், 2010

வெளிநாட்டுத் துருப்பினருக்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது-இராணுவத் தளபதி..!

வெளிநாட்டுத் துருப்பினருக்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் வெளிநாட்டுப் படைவீரர்களுக்கு விரைவில் பயிற்சிகளை வழங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ சேவை ஆரம்பிக்கப்பட்டு 61 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்று வரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய வெளிநாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். உரிய காலத்தில் இராணுவத்தினருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக