செவ்வாய், 5 அக்டோபர், 2010

கல்முனை பள்ளிவாசல் ஊடாக ஆயுதம் ஒப்படைப்பு..!

சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிக்குமாறு கல்முனை பொலிஸார் விடுத்த அறிவித்தலுக்கிணங்க, கல்முனைக்குடி பள்ளிவாசலொன்றினூடாக ரி56 ரக துப்பாக்கியொன்றும், அதற்கான ரவைகளும் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் அறிவுறுத்தலுக்கிணங்க, அம்பாறை மாவட்ட வடக்கு உதவிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் வீரசூரியவின் வழிகாட்டுதலின்கீழ், சட்டவிரோத ஆயுதங்களை பொது மக்களிடமிருந்துகளையும் மேற்படி, வேலைத்திட்டத்தினை தாம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது கூறியுள்ளார். கல்முனைப் பொலிஸ் நிருவாகத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றினை செப்டம்பர் 30ம்திகதிக்குள் தத்தமது பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்கனவே அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக