செவ்வாய், 5 அக்டோபர், 2010

12 தினங்களே வயது நிரம்பிய ஆண் குழந்தையை விற்ற தாய் கைது..!

12தினங்களே வயது நிரம்பிய தனது ஆண் குழந்தையொன்றை 1லட்சம் ரூபாவிற்கு விலைபேசி, இறுதியில் 20ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் ஒருவரை பதுளை நகரில் வைத்து நேற்று முன்தினம் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பசறை மடுல்சீமை ரோபேரி தோட்டத்தைச் சேர்ந்த 33வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை விற்றுள்ளார். இப்பெண் தனது குழந்தையை சில தினங்களுக்கு முன்னர் பதுளை பொது வைத்தியசாலையில் வைத்து பிரசவித்துள்ளார். அதனையடுத்து கடந்த 2ம்திகதி குறித்த ஆண் குழந்தையை பதுளை நகரில் வைத்து திருமலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார். இக்குழந்தை குடும்பத்தில் நான்காவது குழந்தையாகும். குழந்தையை எடுத்துச் சென்றவர்களையோ குழந்தையையோ நேற்று மாலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை
12தினங்களே வயது நிரம்பிய தனது ஆண் குழந்தையொன்றை 1லட்சம் ரூபாவிற்கு விலைபேசி, இறுதியில் 20ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் ஒருவரை பதுளை நகரில் வைத்து நேற்று முன்தினம் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பசறை மடுல்சீமை ரோபேரி தோட்டத்தைச் சேர்ந்த 33வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை விற்றுள்ளார். இப்பெண் தனது குழந்தையை சில தினங்களுக்கு முன்னர் பதுளை பொது வைத்தியசாலையில் வைத்து பிரசவித்துள்ளார். அதனையடுத்து கடந்த 2ம்திகதி குறித்த ஆண் குழந்தையை பதுளை நகரில் வைத்து திருமலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார். இக்குழந்தை குடும்பத்தில் நான்காவது குழந்தையாகும். குழந்தையை எடுத்துச் சென்றவர்களையோ குழந்தையையோ நேற்று மாலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக