
அதிகளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவுள்ளன. புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கவென புதிதாக இரு தடுப்புமுகாம்கள் அமைக்கப்படுவதன்மூலம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அதிகளவு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அர்த்தமாகாது என அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். மதிப்பீடுகள் செய்யப்பட்டபின் அதிகளவான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சாத்தியமுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சகல புகலிடக் கோரிக்கையாளர்களும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். புகலிடக் கோரிக்கைக்கான சரியான காரணங்களை முன்வைக்கத் தவறும் இலங்கையர்கள் மீளவும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக