செவ்வாய், 19 அக்டோபர், 2010

வலது குறைந்தவர்கள் பயன்படுத்தக் கூடியவாறு வடபகுதிக்கான ரயில் நிலையங்களை நிர்மாணிக்க தீர்மானம்..!

வலது குறைந்தவர்கள் பயன்படுத்தக் கூடியவாறு வடபகுதிக்கான ரயில் நிலையங்களை நிர்மாணிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அப் பகுதியில் ஆய்வொன்று நடத்தப்பட்டதாக ரயில்வே திணைக்கள வணிக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறியுள்ளார். இது தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வட பகுதிக்குச் சென்று ஆராய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பளையில் இருந்து காங்கேசன்துறை வரை அமைக்கப்படும் ரயில் நிலையங்களிலும் மதவாச்சியிலிருந்து தலைமன்னார்வரை அமைக்கப்படும் ரயில்நிலையங்களிலும் வலது குறைந்தவர்களுக்கென விசேட வசதிகள் செய்யப்படவுள்ளன. இவர்களுக்கென தனியான மலசல கூடங்களும் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்படி வலது குறைந்தவர்களுக்கு மற்றவரின் உதவியுமின்றி சுதந்திரமாக ரயில் நிலையங்களில் நடமாடமுடியும் என அறிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தென்பகுதியிலும் இத்தகைய வசதிகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக