சனி, 18 செப்டம்பர், 2010

மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதார நடவடிக்கை..!!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் ஆரம்பித்துள்ளது. தண்டனை பெற்ற கைதிகளின் குடும்பங்களில் நிலவும் வறுமையை நீக்கி வாழ்க்கையை உயர்த்த சுயதொழில் உபகரணங்கள் அவர்களது குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. சிறைச்சாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைக்கைதிகளின் மனைவிமார்களுக்கு இடியப்பம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் நலன்புரிச்சங்க தலைவர் வைத்தியர் கே. இ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறிபண்டார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். நலன்புரி அதிகாரி எஸ். ஸ்ரீனிவா சன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக