சனி, 1 மே, 2010

நாட்டின் அபிவிருத்திக்காக உழைக்கும் வர்க்கத்தினரும், அனைத்து சமூகங்களும் கூட்டிணைந்து செயற்பட வேண்டும் - ஜாதிக ஹெல உறுமய..!!

நீண்ட காலத்தின் பின்னர் ஒரே கொடியின் கீழ் மே தினம் கொண்டாடப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத அழுத்தங்களை தொழிலாளர்கள் எதிர்நோக்கியிருந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எனினும், இம்முறை எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமான முiறியல் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் காரணமாக தமிழ் சிங்கள மக்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக உழைக்கும் வர்க்கத்தினரும், அனைத்து சமூகங்களும் கூட்டிணைந்து செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக