
ஏ-9 வீதியினூடாக பயணம் செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து கொழும்பு-யாழ்ப்பாணம் இடையிலான இ.போ.ச. பஸ் சேவைகள் 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியது. எதிர்வரும் தினங்களில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படும் என இ.போ.ச பிரதி முகாமையாளர் லிவ்னிஸ் தெரிவித்தார்.ஆரம்பத்தில் கொழும்பில் இருந்து 3 பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது தினமும் 15 பஸ்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணமாவதோடு 15 பஸ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வருவதாகவும் அவர் கூறினார். பண்டிகை காலங்களில் கொழும்பு வருபவர்களுக்காக பஸ் சேவையை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுதவிர கண்டி-யாழ்ப்பாணம் இடையில் இரு பஸ் சேவைகளும் திருகோணமலை-யாழ்ப்பாணம் இடையிலான இரு பஸ் சேவைகளும் யாழ் - மன்னார் இடையில் 8 பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ் - வவுனியாவுக்கிடையில் 60 பஸ்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி முகாமையாளர் கூறினார். நிவாரணக் கிராமங்களுக்கு வெளியில் சுதந்திரமாகச் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள் யாழ் சென்று வருவதற்காகவும் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு ரயிலில் வரும் மக்கள் யாழ் செல்வதற்காகவும் இவ்வாறு கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.மீள்குடியேற்ற செயற்பாடுகளுடன் இணைந்ததாக கிளிநொச்சி, காரைநகர், துணுக்காய், கோண்டாவில், பருத்தித்துறை, மல்லாவி ஆகிய பிரதேசங்களிலும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மல்லாவியில் உப பஸ் டிப்போ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு அங்கிருந்து 5 இடங்களுக்கான உள்ள+ர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியிலும் உப பஸ் டிப்போவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து யாழ்ப்பாணம், முழங்காவில், ப+நகரி அடங்கலாக 10 இடங்களுக்கான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொது முகாமையாளர் கூறினார்.காரைநகர், பருத்தித்துறை, கோண்டாவில் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிறந்த பஸ் சேவைகளை வழங்குவதற்காக 50 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.அநுராதபுரத்தில் இருந்து புது மாத்தளன் இடையிலும் பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. துணுக்காய் பகுதியில் உள்ள+ர் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்காக 10 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதேவேளை முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளில் ஜனவரி முதற்பகுதியில் இ.போ.ச பஸ் சேவைகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார். தற்பொழுது முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாங்குளம், அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றங்கள் நடைபெற உள்ளன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காக இ.போ.ச உயரதிகாரிகள் குழுவொன்று அடுத்தவாரம் முல்லைத்தீவு செல்ல உள்ளது. வட பகுதி மக்களுக்குச் சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்காக சுமார் 200 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.வட பகுதியில் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்கவும் அப்பகுதி மக்களுக்கு சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக