விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்போர் மற்றும் வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பில் கண்காணித்து தண்டனை வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது இதேவேளை நாடுகடந்த தமிழீழ இராச்சியத்தின் நிர்வாகிகள் கடந்த மூன்று நாட்களாக அமெரிக்காவில் மாநாடு ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்த மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த மாநாடு இடம்பெற்றதாக நாடுகடந்த தமிழீழ இராச்சிய நிர்வாகத்தின் இணைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் மின் அஞ்சல் மூலம் ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகள் கிடைக்கப்பெறும் வரையில் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்ச்சியாக நாடுகடந்த தமிழீழ இராச்சியத்தின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை அமைதியான முறையில் தமது கருத்துகளை வெளியிடுவதற்கு அமெரிக்க அரசியல் சாசனத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக