ஞாயிறு, 2 மே, 2010

சுட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 110பேருக்கு அபராதம்..!!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 110பேரையும் மாத்தறை நீதிமன்றம் தலா 20ஆயிரம் ரூபா அபராதமும் ஆறுமாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்து நேற்று முன்தினம் விடுதலை செய்துள்ளது. சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் இவர்கள் காலி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கை துசெய்யப்பட்டிருந்தனர் இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாத்தறை பிரதம நீதவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது தமது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்தே இவர்களுக்கு தலா 20ஆயிரம் ரூபா அபராதமும் ஆறுமாதகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக