சனி, 10 ஏப்ரல், 2010

பேசாலையில் இருகட்சி ஆதரவாளர்களிடையே மோதல்..!

மன்னார் பேசாலையில் இன்றுமாலை 4.30மணியளவில் இருகட்சி ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது லக்ஷ்மன் (வயது24) என்பவர் கடும்காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பேசாலை கிராமஅலுவலரும் ஆளும்கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் அவ்விடத்தில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக