திங்கள், 26 ஏப்ரல், 2010

அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடவிருப்பதாக பேரியல் அஸ்ரப் தெரிவிப்பு..!!

கடந்த நாடளுமன்றத் தேர்தலில் தன்னால் வெற்றியடைய முடியாத நிலை ஏற்பட்ட போதும், அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடவிருப்பதாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் வெளிநாட்டு உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் பதவி எதனையும் தான் அரசிடம் கோரவில்லையென்றும் இது சம்பந்தமாக தனக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த பொதுதேர்தலில் மக்கள் தன்னை தெரிவுசெய்யாத போதிலும்கூட அவர்களை விட்டு ஒதுங்கியிருக்க தான் தயாரில்லை என்றும், தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றவிருப்பதாகவும் பேரியல் அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக