ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

வன்முறை அரசியலை தமிழ்மக்கள் ஏற்கவில்லை என்பதையே தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தோல்வி காட்டுகின்றது -அமைச்சர் கருணாஅம்மான்..!!

வன்முறை அரசியலை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் தோல்விகாட்டுகின்றதென தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தோல்வியடைந்துள்ளது. இதுபற்றி கருத்துரைக்கையிலேயே முரளிதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளும்கட்சி பெரு வெற்றியடைந்துள்ளது. தமிழ்மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல்வதற்கும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக