புதன், 21 ஏப்ரல், 2010

நான்கு இலங்கையர்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இத்தாலியில் படுகொலை..!

ஏப்ரல் மாதத்தில் மட்டும் இலங்கையை சேர்ந்த நான்கு பேர் இத்தாலியில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம்4ம் திகதி இரண்டு இலங்கையர்களை மற்றுமொரு இலங்கையர் பிளோரன்ஸ் பகுதியில் வைத்து படுகொலை செய்திருந்தார் பி;ன்னர் ஏப்ரல் 10ம் திகதி 27வயது இலங்கை இளைஞர் ஒருவர் வெனிஸ் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கடந்த 16ம் திகதி இத்தாலியின் பிஸ்தோயா பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரை இலங்கையர் என சந்தேகிக்கப்படும் நபர்கள் படுகொலை செய்து தப்பிச் சென்றுள்ளனர். இத்தாலி தேசத்தில் பிஸ்தோயா எனும் இடத்தில் வசித்து வந்த இராமன் விஜயலக்ஷ்மி எனும் 36வயதுடைய கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் 17-04-2010 வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார் என இத்தாலிய பொலிஸ் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கை தூதுவராலய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 16ம் திகதிவரையில் வீதிவிபத்துகள் மற்றும் படுகொலை சம்பவங்களினால் இலங்கையை சேர்ந்த 18பேர்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக