திங்கள், 19 ஏப்ரல், 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை ஒத்தி வைப்பு..!

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று நடைபெற்றுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் தொடர்ச்சி நாளை இடம்பெறுமென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பாக முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை எதிர்வரும் மேமாதம் 5ம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அன்று அவருக்கெதிராக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக