புதன், 21 ஏப்ரல், 2010

சரத்பொன்சேகாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் ஜே.வி.பியின் கோரிக்கை நகைப்புக்குரியது-ஐக்கிய தேசியக் கட்சி..!

ஜெனரல் சரத பொன்சேகாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென்ற ஜே.வி.பியின் கோரிக்கை நகைப்புக்குரியதென்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஜே.வி.பி கட்சி படுதோல்வியை தழுவியுள்ளதென்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். வெறும் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசியல் பின்னணி தற்போது ஜே.வி.பிக்கு கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பார். நாடாளுமன்றத்திற்கு முதற் தடவையாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிற்கு அமர்த்துவது பொருத்தமற்றதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக