புதன், 7 ஏப்ரல், 2010

நாவலப்பிட்டி தொகுதியில் மாத்திரம் வாக்களிப்பு நிலையங்களில் அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த ஏற்பாடு..!

கண்டி நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் மாத்திரம் வாக்களிப்பு நிலையங்களில் விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு விடுத்த வேண்டுகோளை தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் சற்றுமுன் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் யானைச் சின்னத்தில் மனோகணேசன் போட்டியிடுகின்றார். நேற்று கொழும்பில் தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்தில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திதுப்பேசினார். இச்சந்திப்பின்போதே ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாள மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது அச்சுறுத்தப்பட்டனர். அவர்களது வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும், தங்களுக்கு நாவலப்பிட்டி பொலீஸ்நிலைய அதிகாரிகள் விடயத்தில் நம்பிக்கை இல்லை என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக