வியாழன், 22 ஏப்ரல், 2010

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக 225பேர் இன்றுகாலை பதவிப் பிரமாணம்..!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக 225பேர் இன்றுகாலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஏழாவது நாடாளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 144ஆசனங்கள் கிடைத்துள்ளது. இதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 ஆசனங்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 14 ஆசனங்களும், ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 ஆசனங்களும் கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக