ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எதிர்வரும் 14ம் திகதி விகிர்த்தி புதுவருட பிறப்பு..!

புதிய விகிர்த்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி எதிர்வரும் 14ம் திகதி சித்திரை மாதம் 4ம் திகதி காலை 6.57க்கு மேடலக்கிணமும் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை நிதியும் மரணயோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31ம் திகதி 14ம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடியவேளையில் புதுவருடம் பிறக்கிறது என சுட்டிக் காட்டப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு 2.57முதல் புதன்கிழமை 10.57வரையுள்ள காலம் புண்ணிய காலமாக திருக்கணித பஞ்சாங்கமும் செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணியகாலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது. இப்புண்ணிய காலத்தில் மருந்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாண்டை உடுத்தி சித்திரை கொண்டாடலாம் என வேண்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக