வியாழன், 4 மார்ச், 2010

தமிழ் சிங்கள மாவணவர்களின் சந்திப்புக்கான சிறப்பு ஏற்பாடு..!

சிங்கள தமிழ் மாணவர்களுக்கிடையிலான சமாதான உறவுப்பால நிகழ்வொன்று காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் மனித அபிவிருத்திதாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தலமையில் நடைபெற்றது. அங்கு அம்பாரை மற்றும் கல்முனை வலயங்களைச்சேர்ந்த காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரி அம்பாரை நுவான்கல மகாவித்தியாலயம் ஹிங்குறான காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஆசிரிய ஆலோசகர்களும் அடங்கலாக 125 பேர் கலந்து கொண்டனர். மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் உரையாற்றுவதையும் மாணவர்களின் சமாதான நிகழ்ச்சிகளையும் கடற்கரையில் மாணவர்கள் குதூகலிப்பதையும் படங்களில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக