
மாத்தளையில் பாடசாலை மாணவர்களுக்கு வங்கிய சத்துணவு நஞ்சாகி 10வயது பாடசாலை மாணவியொருவர் மரணமடைந்தமை 129 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக சத்துணவு வழங்கிய ஒப்பந்தக்காரரையும், உதவியாளரான அவரது மனைவியையும் தலா 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல மாத்தளை மாவட்ட மேலதிக நீதவான் சாலிய பெரேரா உத்தரவிட்டுள்ளார். இதேவேளை மரணமான பாடசாலை மாணவி கல்விகற்ற மாத்தளை புத்தகோஸ சிங்கள வித்தியாலய அதிபர் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர், உணவு ஒப்பந்தத்துக்கு சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் எதிர்வரும் மார்ச் 02ம் திகதி நீதிமன்றில் ஆஜர்செய்யும் படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாத்தளை பலாபத்வெல புத்தகோஸ வித்தியாலம் தொம்பவெல மற்றும் கவட்டயாமுன கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு, வழங்கிய பகல் சத்துணவு நஞ்சாகி புத்தகோஸ மாணவியின் மரணம், 129 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டமை சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மாத்தளை மேலதிக நீதவான் சாலிய பெரேரா மேற்படி உத்தரவை விதித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு விடயத்தில் பாடசாலை நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறிய மேலதிக நீதவான் சாலிய பெரேரா பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மாணவர்களுக்கு வழங்குவதற்கு உகந்ததா என்பதை பரீட்சித்து உறுதிப்படுத்தியதன் பின் மாண வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நீதவான் கூறியுள்ளார். கவனயீனமாக உணவு தயாரித்தமை, பரிமாற்றம் செய்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் 298ம் பிரிவின்படி மஹவெல பொலிஸாரினால் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் பீ.அறிக்கை சமர்பிக்கப்பட்டது. தலா 2லட்சம் ரூபா சரீரப் பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டோர் மாத்தளை தொம்பவயைச் சேர்ந்த ஜி.பீ.எம். சமரகோன் பண்டா, இந்திரலதா சமன் தி விஜேரத்ன ஆகிய கணவன்-மனைவி இருவருமாவர். மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிறிவர்தனாவின் பணிப்பின்பேரில் மாத்தளை மஹவெல பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக