
அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடாத்திய கனடா வர்த்தக சம்மேளனமும், வைத்திய சங்கமும் இன்று மஹிந்தவுடன் சந்திப்பு. அன்று புலிகளுக்காக குரல் கொடுத்து போராட்டங்கள் நடாத்திய இந்த கூட்டம் புலியை வைத்து அன்று பிழைப்பு நடாத்தியது. புலிகளின் தலைமை கடந்த ஆண்டு மே மாதம் அழிக்கப்பட்ட நிலையில், தற்போது மஹிந்த அரசுடன் உறவு கொண்டு தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவ் குழு அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சு நடாத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.புலிகள்-ரணில் சமாதான காலகட்டத்தின்போது கனடாவில் இருந்து லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜிம் கரியான்ஸ், டிரக் லீ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்து சென்று பிரபாகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களான வைத்திய கலாநிதி சிவாஜி, கணேஸ் சுகுமார், குலா செல்லத்துரை போன்றவர்கள் பிரதானமாக செயற்பட்டவர்கள் ஆவர். தமது பிழைப்புக்காக அன்று புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை துரோகிகளாகவும், தீண்டதாகதவர்களாக கூறிவந்த இந்த வர்த்தக சமூகம் இன்று வன்னி இறுதி கட்டபோர் மூலம் தமிழினத்தின் அவலத்திற்கு காரணமான அரசுடன் ஊடல் கொள்வது மிகப்பெரும் துரோகமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக