திங்கள், 8 பிப்ரவரி, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - புளொட் தலைவர் த.சித்தார்த்தன்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைத் தேடித்தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரலாற்று ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பெருந்தொகையான மக்கள் வெற்றிபெற ஆதரித்துள்ளமை அவருடைய தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது. எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசி சிறுபான்மை மக்களின் பிரச்சினையைத் தீர்;த்துக் கொள்ள வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த புலிகளின் யுகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை மீண்டும் விடக்கூடாதென்றும், கடந்த காலங்களில் புலிகளால் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் முடக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டிள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக