வியாழன், 4 பிப்ரவரி, 2010

உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளின் ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி கிசோர் கொலை அச்சுறுத்தல்..!

உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளின் ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி சிவநாதன் கிசோர் கொலை அச்சுறுத்தல் விடுத்து;ளளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நேற்றுமாலை 5.15அளவில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக நேற்றுக்காலை 11மணியளவில் 024-2222068 என்ற வவுனியா தொலைபேசி இலக்கத்திலிருந்து சுடர்ஒளி கொழும்பு அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட கிசோர் எம்.பி ஆசிரியர் வித்தியாதரனை விசாரித்துள்ளார். அவர் அச்சமயம் ஆசிரியர் பீடத்தில் இல்லையென்று பதிலளிக்கப்பட்டுள்ளது. இதன்போது தமக்கு எதிராக உதயன், சுடர்ஒளியில் விமர்சன செய்தியில் பிரசுரிக்கக் கூடாதென என கிசோர் எம்.பி ஆசிரிய பீட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மீண்டும் மாலை 5.13க்கு 024-2222706 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து கிசோர் எம்.பி தொடர்பு கொண்டு ஆசிரியர் வித்தியாதரனுடன் உரையாடியுள்ளார். இதன்போது தன்னைப் பற்றி செய்தி தருபவர் யார், அனுமதியின்றி தன்னைப் பற்றி செய்தி வெளியிடக் கூடாதென்று கிசோர் இதன்போது தெரிவித்துள்ளார். இவர் அளித்த பதிலைத் தொடர்ந்து கிசோர் எம்.பி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக